மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
x

மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் உயிரிழந்தார்.

அரியலூர்

வி.கைகாட்டி:

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் உசேன்(வயது 26). இவர் வி.கைகாட்டியில் அரியலூர் சாலையில் இருசக்கர வாகனங்களின் இருக்கை கவர் விற்பனை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் உசேன், டீ வாங்கிக்கொண்டு அரியலூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் நோக்கி வந்த அரசு விரைவு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த உசேனை அக்கம், பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உசேனை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story