போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை


போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை
x

போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

பாலியல் வன்கொடுமை

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே அத்திக்கனூர் பகுதியை சேர்ந்தவர் அரசு(வயது 22). இவர் புதுக்கோட்டை அருகே ஒரு பேக்கிரியில் வேலை பார்த்து வந்தார். அப்போது 11-ம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமியிடம் பழகி, அவரை தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு கடத்தி சென்றார். அங்கு சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இது தொடர்பாக சிறுமியின் தரப்பில் புதுக்கோட்டை மாவட்டம் பனையப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசுவை கைது செய்தனர்.

ஆயுள் தண்டனை

இந்த வழக்கு புதுக்கோட்டை மகிளா கோர்ட்டில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சத்யா நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில் சிறுமியை கடத்தி சென்றதற்காக அரசுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும், போக்சோ பிரிவில் ஆயுள் தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும், அபராதம் கட்டத்தவறினால் மேலும் ஓராண்டு சிறை தண்டனையும் விதித்து, இதனை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும், என்றும் தீர்ப்பளித்தார்.

மேலும் அபராதம் விதிக்கப்பட்ட தொகையை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் யோகமலர் ஆஜராகி வாதாடினார். தண்டனை விதிக்கப்பட்ட அரசுவை திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.


Next Story