மழை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
மழை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.
நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே அகரக்கொந்தகை ஊராட்சி வாழ்மங்கலத்தில் உள்ள மழை மாரியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது. இதை முன்னிட்டு கஞ்சி வார்த்தல், பூச்சொரிதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து அம்மனுக்கு மஞ்சள், பால், பன்னீர், தயிர், தேன், இளநீர், மாப்பொடி, திரவியப்பொடி உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி தீமிதி உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அன்னவாகனத்தில் வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story