முத்துமாரியம்மன் கோவில் திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
x

பேளாரஅள்ளியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு அருகே பேளாரஅள்ளியில் முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை, பூக்களால் சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து பக்தர்கள் ஆடு, கோழி, பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story