பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா
காவேரிப்பட்டணம் அருகேபெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழாவில் பக்தர்கள் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கிருஷ்ணகிரி
காவேரிப்பட்டணம்
காவேரிப்பட்டணம் ஒன்றியம் மாரிசெட்டி ஊராட்சி எம்.கொட்டாவூர் கிராமத்தில் பெரியாண்டிச்சி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவில் குறவர் இனமக்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். விழாவில் ஓசூர், திருப்பத்தூர், மேல்மலையனூர், அரூர், சேலம், வேலூர் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள், பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் பூசாரியிடம் சாட்டையடி வாங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story