பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா
ராயக்கோட்டை அருகே பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.
கிருஷ்ணகிரி
ராயக்கோட்டை
ராயகோட்டை அருகே உள்ள மூங்கில்பட்டி கிராமத்தில் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கொடியேற்றி கங்கனம் கட்டுதல், பால் குடம் எடுத்தல், கங்கை பூஜை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. நேற்று முன்தினம் கலசஸ்தாபனம், கணபதி ஹோமம், பிரித்தியங்கிரா தேவி ஹோமம், பத்ரகாளியம்மன் மூலமந்திர ஹோமம், நவகிரக ஹோமம், தீச்சட்டி எடுத்தல், தீ மிதித்தல நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை பூசாரி மேச்சேரியப்பன், அர்ச்சகர் சதாசிவம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பச்சையம்மாள் ராஜன், கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story