மரக்கடையில் பயங்கர தீ


மரக்கடையில் பயங்கர தீ
x
தினத்தந்தி 11 April 2023 7:00 PM GMT (Updated: 11 April 2023 7:01 PM GMT)

திண்டுக்கல் அருகே மரக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணி (வயது 40). இவர், திண்டுக்கல்லை அடுத்த நந்தவனப்பட்டியில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர், வழக்கம் போல் கடைைய பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நள்ளிரவு 1 மணி அளவில் அவரது மரக்கடையில் திடீரென தீப்பிடித்தது. சிறிதுநேரத்தில் மள, மளவென தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது.

இதுகுறித்து திண்டுக்கல் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் நிலைய அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் 1 மணி நேரத்துக்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். இருப்பினும் கடையில் இருந்த மரங்கள் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலானது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தாடிக்கொம்பு போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது யாரேனும் மரக்கடையில் தீ வைத்து கொளுத்தினார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story