செல்போன் திருடிய வாலிபர் சிக்கினார்
தூத்துக்குடியில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ரோட்டை சேர்ந்தவர் முத்துசாமி. இவருடைய மகன் செந்தில்குமார் (வயது 41). இவர் எட்டயபுரம் ரோட்டில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு வந்த தூத்துக்குடி அய்யர்விளையை சேர்ந்த மாரியப்பன் (20) என்பவர் நைசாக செல்போனை திருடினாராம். அப்போது விழித்துக் கொண்ட செந்தில்குமார், அவரது நண்பர்கள் உதவியுடன் மாரியப்பனை மடக்கி பிடித்தார். அப்போது அவர்கள் தாக்கியதில் மாரியப்பனுக்கு காயம் ஏற்பட்டதால் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஹென்சன் பவுல்ராஜ் வழக்கு பதிவு செய்து மாரியப்பனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story