குடிசை வீடு எரிந்து நாசம்


குடிசை வீடு எரிந்து நாசம்
x

ஆற்காட்டில் குடிசை வீடு எரிந்து நாசமானது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு கனகசபா தேருவை சேர்ந்தவர் டீகாராமன், கூலித் தொழிலாளி. இவரது குடிசை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இந்த குடிசை வீட்டில் மின் இணைப்பு கிடையாது. எனவே பட்டாசு வெடித்து அதன் தீப்பொறி குடிசை மேல் விழுந்து பற்றி எரிந்து இருக்கலாம் என கருதப்படுகிறது.


Next Story