விவசாயி மர்ம சாவு


விவசாயி மர்ம சாவு
x
தினத்தந்தி 18 Jun 2023 6:45 PM GMT (Updated: 18 Jun 2023 6:46 PM GMT)

கடலூர் முதுநகர் அருகே விவசாயி மர்மமான முறையில் இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர்

கடலூர் முதுநகர்,

கடலூர் பழைய வண்டிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 72) விவசாயி. இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகே உள்ள முட்புதற்களை அகற்ற சென்றதாக தெரிகிறது. இந்த நிலையில் அங்கு ஜெயக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் கடலூர் முதுநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஜெயக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் ஜெயக்குமாரை யாரேனும் அடித்து கொலை செய்து முட்புதரில் வீசிவிட்டு சென்றார்களா?, அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல்வேறு கோணங்களில போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story