வரதட்சணை தராததால் குழந்தையை கல்லால் அடித்துக் கொன்ற தந்தை


வரதட்சணை தராததால் குழந்தையை கல்லால் அடித்துக் கொன்ற தந்தை
x

உத்தமபாளையம் அருகே வரதட்சணை தராததால் குழந்தையை கல்லால் அடித்துக் கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

உத்தமபாளையம்,

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி. இவரது மகள் நவீனா (வயது 22). இவரும் தேவதானப்பட்டி ஆர்.எஸ்.நகரை சேர்ந்த நாகராஜ் ( 23) என்பவரும் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். நாகராஜ் தனியார் கம்பெனி ஒன்றில் சேல்ஸ்மேனாக வேலை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நாகராஜ் திருமணம் செய்து கொண்டபோது எந்தவிதமான வரதட்சணையும் பெறவில்லை என்பதால் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அவ்வப்போது தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நவீனாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்ததுள்ளது. இந்த நிலையில் மனைவி வீட்டுக்கு வந்த நாகராஜ் மாமியார் முத்துலட்சுமியிடம் நகை தொடர்பாக பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அப்போது நாகராஜ் கீழே கிடந்த கல்லை எடுத்து எறிந்துள்ளார். அந்த கல் குழந்தையின் தலையில் பட்டு பலத்த காயம் அடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.

இச்சம்பவம் தொடர்பாக ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து நவீனாவின் கணவர் நாகராஜை போலீசார் கைது செய்தனர்.


Next Story