நூலகம் தீப்பிடித்து எரிந்து புத்தகங்கள் சாம்பல்


நூலகம் தீப்பிடித்து எரிந்து புத்தகங்கள் சாம்பல்
x

நூலகம் தீப்பிடித்து எரிந்து புத்தகங்கள் சாம்பல்

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை:

பட்டுக்கோட்டை அருகே நூலகம் தீப்பிடித்து எரிந்து புத்தகங்கள் சாம்பலாயின. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஊர்ப்புற நூலகம்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள சூரப்பள்ளம் கிராமத்தில் அரசுக்கு சொந்தமான ஊர்ப்புற நூலகம் உள்ளது. இங்கு பல்வேறு மாத இதழ்கள், நாளிதழ்கள் மற்றும் பல்வேறு தலைப்புகளில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் இருந்தன. இதனால் மக்கள் ஆர்வத்துடன் ்நூலகத்துக்கு சென்று புத்தகங்களை படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை நூலகத்தை மூடிவிட்டு நூலக ஊழியர்கள் வீட்டுக்கு சென்று விட்டனர். மறுநாள் காலை வந்து பார்த்தபோது நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மற்றும் அங்கு இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலான நிலையில் இருந்தன.

போலீசார் விசாரணை

இதுபற்றி பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மின்கசிவு காரணமாக நூலகம் தீப்பிடித்து எரிந்ததா? அல்லது யாராவது நூலகத்திற்கு தீ வைத்தார்களா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நூலகம் தீப்பிடித்து எரிந்து புத்தகங்கள் சாம்பலானதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story