மின்னல் தாக்கியதில் தென்னை மரங்கள் தீப்பிடித்தன


மின்னல் தாக்கியதில் தென்னை மரங்கள் தீப்பிடித்தன
x

வத்திராயிருப்பு அருகே மின்னல் தாக்கியதில் தென்னை மரங்கள் தீப்பிடித்தன

விருதுநகர்

வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இந்தநிலையில் வத்திராயிருப்பு அருகே உள்ள தாணிப்பாறை விலக்கில் இருந்து மந்திதோப்பிற்கு செல்லும் வழியில் கருப்பசாமி கோவில் அருகே உள்ள தென்னந்தோப்பில் மின்னல் தாக்கியதில் இரண்டு தென்னை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story