பஸ் டிரைவரை தாக்கிய லாரி டிரைவர் கைது


பஸ் டிரைவரை தாக்கிய லாரி டிரைவர் கைது
x

சாத்தான்குளத்தில் பஸ் டிரைவரை தாக்கிய லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் இருந்து நெல்லைக்கு நேற்று முன்தினம் மதியம் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. டிரைவராக நெல்லை சங்கர்நகரை சேர்ந்த செல்லையா மகன் சுந்தரபாண்டியன் (வயது 37) பணியில் இருந்தார். சாத்தான்குளம் ஆத்துப்பாலம் அருகே வள்ளியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்றபோது பஸ்சின் முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் வழி விடாமல் சாலையின் மைய பகுதியில் சென்றதாக கூறப்படுகிறது.

இதனால் அந்த நபரை, சுந்தர பாண்டியன் கண்டித்தாராம். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த அந்த நபர், சுந்தரபாண்டியனை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதில் காயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எபநேசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, வள்ளியம்மாள்புரத்தை சேர்ந்த லாரி டிரைவர் கந்தசாமி மகன் உதயகுமார் (42) என்பவரை கைது செய்தார்.


Next Story