தொழிலாளியை மிரட்டியவர் கைது


தொழிலாளியை மிரட்டியவர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2023 7:00 PM GMT (Updated: 17 Oct 2023 7:01 PM GMT)

தொழிலாளியை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

பத்தமடை திரு.வி.க. தெருவை சேர்ந்த கண்ணையா மகன் சீனிவாசன் (வயது 41). தொழிலாளியான இவர் தனது வீட்டின் முன்பு நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பத்தமடை, திருவள்ளுவர் தெருவை சேர்ந்த அருள்ராஜ் மகன் ஜெபஅஜித் (28) என்பவர் சீனிவாசனிடம் தகராறில் ஈடுபட்டு அவதூறாக பேசி, கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பத்தமடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ஜெபஅஜித்தை கைது செய்தார்.


Next Story