மாமாங்கம் செயற்கை நீரூற்றில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்


மாமாங்கம் செயற்கை நீரூற்றில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்
x

ஆடிப்பெருக்கையொட்டி மாமாங்கம் செயற்கை நீரூற்றில் பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.

சேலம்

சேலம் மாமாங்கம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டு செயற்கை நீரூற்று அமைப்பது வழக்கம். அந்த செயற்கை நீரூற்றில் ஏராளமான புதுமண தம்பதிகள் வந்து குளித்து மகிழ்வர். அதன்படி நேற்று மாமாங்கம் பகுதியில் ஒரு கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டது. காலையில் இருந்து ஏராளமான பொதுமக்கள் அங்கு சென்று செயற்கை நீரூற்றில் குளித்து மகிழ்ந்தனர். குறிப்பாக புதுமணத்தம்பதிகள் ஏராளமானவர்கள் செயற்கை நீரூற்றில் குளித்து மகிழ்ந்தனர்.

பின்னர் அருகில் உள்ள முனியப்பன், விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். மேலும் திரளான பொதுமக்கள் குடும்பத்துடன் நேற்று செயற்கை நீரூற்றுக்கு வந்திருந்தனர். இதனால் சேலம்-பெங்களூரு புறவழிச்சாலையில் இருந்து செயற்கை நீரூற்று அமைக்கப்பட்டு இருந்த சுமார் 1 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.


Next Story