ஓடையில் உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிப்பு


ஓடையில் உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிப்பு
x
தினத்தந்தி 18 Oct 2022 6:45 PM GMT (Updated: 18 Oct 2022 6:46 PM GMT)

ரோடு அருகே பலத்த மழைக்கு ஓடையில் உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது.

திண்டுக்கல்

கொடைரோடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளப்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் அகரன் குளம் கண்மாய்க்கு நீர்வரத்து அதிகரித்தது. அந்த கண்மாய்க்கு வரும் சேம் ஊத்து ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் பள்ளப்பட்டி பிரிவு அருகே ஓடையில் உடைப்பு ஏற்பட்டது. அந்த ஓடையின் அருகே உள்ள விவசாய நிலங்களில் தண்ணீர் புகுந்தது. மேலும் புலமாசிகுளம் கண்மாய்க்கு செல்லும் சாலை துண்டிக்கப்பட்டது. அந்த சாலை வழியாக செல்பவர்கள் தண்ணீரில் இறங்கி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கிழக்கு தோட்ட குடியிருப்பு பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே சேம் ஊத்து ஓடையையும், துண்டிக்கப்பட்ட சாலையையும் உடனே சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Next Story