கடையில் திருடியவர் கைது


கடையில் திருடியவர் கைது
x

ஆரணி நகரில் கடையில் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சைதாப்பேட்டை கந்தசாமி தெருவை சேர்ந்த தேவராஜ் என்பவரின் மகன் ரவி (வயது 37). இவர் ஆரணி புதிய பஸ் நிலைய வளாகத்தில் உள்ள நகராட்சி கடையில் முட்டை வியாபாரம் செய்து வருகிறார். கடைக்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஆரணி நகர போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்ேபரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர்.

இந்த நிலையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது, கண்காணிப்பு கேமராவில் பதிவான நபர் வருவதை கண்டுபிடித்தனர். உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தியதில், கரூர் மாவட்டம் கோயம்பள்ளி பகுதியை சேர்ந்த பாண்டியன் (43) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story