பணகுடி அருகே பரிதாபம்: கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பலி


பணகுடி அருகே பரிதாபம்:  கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பலி
x

பணகுடி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி அருகே கிணற்றில் தவறி விழுந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

9-ம் வகுப்பு மாணவன்

நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த புஷ்பவனம் பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினராஜ். இவருடைய மகன் ஜெபஸ்டின் (வயது 14). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வந்தான்.

இவன் நேற்று மாலையில் பணகுடி வடக்கு நாற்கரசாலை மேம்பாலம் அருகில் உள்ள தோட்டத்துக்கு சென்றான். அங்குள்ள கிணற்றின் அருகில் ஜெபஸ்டின் நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக கிணற்றுக்குள் தவறி விழுந்தான். இதில் தண்ணீரில் மூழ்கிய அவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், பணகுடி போலீசார் மற்றும் வள்ளியூர் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, ஜெபஸ்டின் உடலை மீட்டனர். அவனது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணகுடி அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story