நண்பர்களுடன் சென்ற வாலிபர் மர்மச்சாவு


நண்பர்களுடன் சென்ற வாலிபர் மர்மச்சாவு
x

தக்கலை அருகே நண்பர்களுடன் சென்ற வாலிபர் வடிகால் ஓடையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலை அருகே நண்பர்களுடன் சென்ற வாலிபர் வடிகால் ஓடையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாலிபர் பிணம்

தக்கலை அருகே உள்ள முட்டைக்காட்டில் வடிகால் ஓடையில் நேற்று காலையில் ஒரு வாலிபரின் பிணம் கிடந்தது. இதை கண்ட அந்தபகுதி பொதுமக்கள் கொற்றிகோடு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சப்-இன்ஸ்பெக்டர் ரசல்ராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து வாலிபரின் உடலை கைபற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிணமாக கிடந்தவர் கொற்றிக்கோடு, பிலாங்கன்றுவிளையை சேர்ந்த நாடக ஆசிரியர் ஞானதாஸ் மகன் ஜெகதீஸ் (வயது30) என்பது தெரியவந்தது. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

நண்பர்களுடன் சென்றவர்

நேற்று முன்தினம் இரவு நண்பர்களோடு உணவருந்த செல்வதாக வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்ைல. அவரை குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில், ஜெகதீஸ் வடிகால் ஓடையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரது சாவுக்கான காரணம் தெரியவில்லை.

இதுகுறித்து கொற்றிகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பிரேத பரிசோதனை முடிவு வந்த பின்புதான் சாவுக்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story