வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நெல்லை தச்சநல்லூர் தேனீர்குளம் கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் செம்புலிங்கம் மகன் சுரேஷ் (வயது 27). இவர் மீது கொலை முயற்சி, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துதல் போன்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சுரேஷ், கொலைமுயற்சி வழக்கில் தச்சநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் சுரேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை சந்திப்பு உதவி போலீஸ் கமிஷனர் அண்ணாதுரை, தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர் ஆகியோர் மாநகர போலீஸ் கமிஷனருக்கு பரிந்துரை செய்தனர்.

போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார் அதனை ஏற்று சுரேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி சுரேசை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பதற்கான ஆணையை தச்சநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வனசுந்தர், பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.


Next Story