மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

குமரியில் மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரியில் மாணவியை பலாத்காரம் செய்த வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

குண்டர் சட்டம்

ஏழுதேசம் காஞ்சாம்புறம் பகுதியை சோ்ந்த சாகுல் அமீது மகன் ரியாஸ் (வயது 21). 6-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ரியாசை குளச்சல் மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் அவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் ரியாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று ரியாசை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். இதையடுத்து அவரை குளச்சல் மகளிர் போலீசார் கைது செய்து நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனா்.


Next Story