பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் கைது


பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் கைது
x

பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

திருச்சி

திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் பயணம் செய்வதற்காக கடலூர் மாவட்டம் சிதம்பரம் வல்லம்படுகையை சேர்ந்த இலந்தன் (வயது 31) என்பவர் வந்தார். அவரை குடியுரிமை பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர் மீது சென்னை வேப்பேரி காவல் நிலையத்தில் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரை விமான நிலைய போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சென்னைக்கு அழைத்து சென்றனர்.


Next Story