போலீஸ் நிலையத்தில் திரண்டவர்களால் பரபரப்பு


போலீஸ் நிலையத்தில் திரண்டவர்களால் பரபரப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 7:30 PM GMT (Updated: 6 Nov 2022 7:30 PM GMT)

ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் நிலையத்தில் திரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

சேலம்

ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சேலம் சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். மேலும் அவர்கள் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் கூறும் போது சாமிநாதபுரம் பகுதியை சேர்ந்த ஒருவர் பல வருடங்களாக ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இதில் ஏராளமானவர்கள் சேர்ந்தோம். குறிப்பிட்ட காலம் முடிந்த பிறகு ஏலச்சீட்டு நடத்தியவர் பணத்தை திரும்ப கொடுக்கவில்லை. அவரிடம் கேட்ட போது தற்கொலை செய்து கொள்ள போவதாக மிரட்டுகிறார். எனவே ஏலச்சீட்டு நடத்தி லட்சக்கணக்கில் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறியதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து சென்றனர். இதனால் நேற்று பள்ளப்பட்டி போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story