சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்


சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்
x

சாலையை ஆக்கிரமித்த முட்செடிகள்

திருவாரூர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா 54 நெம்மேலி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் மன்னார்குடி-54 நெம்மேலி சாலையின் இருப்பக்கமும் கருவேல மரங்கள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர் மீது முட்கள் படுவதால் காயம் ஏற்பட்டு விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்வோர் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-பொதுமக்கள், 54 நெம்மேலி, மன்னார்குடி.


Next Story