தமிழகத்தில் மேலும் 824 பேருக்கு கொரோனா


தமிழகத்தில்  மேலும் 824 பேருக்கு கொரோனா
x

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 824-பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் இன்று புதிதாக 824 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 156 பேர், கோவையில் 90 பேர், செங்கல்பட்டில் 61 பேர் உள்பட அனைத்து மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.

மேலும், 12 வயதுக்குட்பட்ட 62 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 119 முதியவர்களுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் 393 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு இல்லை. கொரோனா பாதிப்புக்குள்ளாகி 7 ஆயிரத்து 972 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 2 ஆயிரத்து 984 பேரும், கோவையில் 756 பேரும் சிகிச்சையில் இருக்கின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story