புகையிலை பொருட்கள் விற்றவர் கைது


புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
x

புகையிலை பொருட்கள் விற்றவர் கைது

திருநெல்வேலி

வடக்கன்குளம்:

பழவூர் அருகே மாடம்பிள்ளை தர்மத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் கணேசன் (வயது 47). இவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவருடைய கடையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை வைத்து விற்பனை செய்து உள்ளார். தகவல் அறிந்த பழவூர் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அங்கிருந்த புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து கணேசனை கைது செய்தனர்.


Next Story