குற்றால அருவிகளில் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்..!


குற்றால அருவிகளில் உற்சாக குளியல் போட்ட சுற்றுலா பயணிகள்..!
x

குற்றாலத்தில் இன்று சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

தென்காசி,

குற்றாலத்தில் தற்போது சீசன் களைகட்டி உள்ளது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலியருவி என அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இந்த சீசனை அனுபவிப்பதற்காக கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். நேற்று சனிக்கிழமை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இந்த நிலையில், இன்று ஞாயிறு விடுமுறை என்பதால் குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. ஐந்தருவி, மெயின் அருவி மற்றும் பழைய குற்றாலத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் சுற்றுலா பயணிகளை வரிசையில் நின்று குளிக்க போலீசார் அனுமதித்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து சுற்றுலா பயணிகள் அருவிகளில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் திரும்பும் திசையெங்கும் மக்கள் கூட்டமாக உள்ளது.

குற்றாலம் பகுதியில் சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story