வடமதுரையில் பேரூராட்சி கூட்டம்


வடமதுரையில் பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 8 March 2023 9:00 PM GMT (Updated: 8 March 2023 9:00 PM GMT)

வடமதுரையில் பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது.

திண்டுக்கல்

வடமதுரை பேரூராட்சி அலுவலகத்தில், பேரூராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கல்பனாதேவி, துணைத்தலைவர் மலைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 14-வது வார்டு கவுன்சிலர் கணேசன் வரவேற்று பேசினார்.

இந்த கூட்டத்தில், வடமதுரை பேரூராட்சியில் 2022-23-ம் ஆண்டு தூய்மை இந்தியா இயக்கம் 2.0 திட்டத்தில் எம்.ஜி.ஆர். நகரில் வளமீட்பு பூங்காவில் உலர்க்களம் மற்றும் மேற்கூரை அமைக்கும் பணிகளுக்கான ஒப்பந்த புள்ளியை அங்கீகரித்தல், ஏ.வி.பட்டி சாலையில் மந்தைகுளம் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு தொட்டி அமைத்தல் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர். முடிவில் செயலர் முரளிமோகன் நன்றி கூறினார்.


Next Story