ரெயில் மோதி மூதாட்டி பலி


ரெயில் மோதி மூதாட்டி பலி
x

ரெயில் மோதி மூதாட்டி பலியானார்.

கரூர்

குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள கீழவதியம் பகுதியில் ரெயிலில் அடிபட்டு 75 வயது மதிக்கதக்க மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்துள்ளார். இதைப்பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் கரூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ரெயில் மோதி இறந்தவர் கீழவதியம் பகுதியை சேர்ந்த ஜெயராமன் மனைவி காமாட்சி (வயது 80) என்பதும், இயற்கை உபாதைகள் கழிப்பதற்காக சென்றபோது சென்னையில் இருந்து மங்களூர் நோக்கி சென்ற ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே இறந்தது தெரியவந்தது. இது தொடர்பாக காமாட்சியின் மகன் முருகேசன் கொடுத்த புகாரின் பேரில் கரூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story