லாரி மோதி டிரைவர் பலி


லாரி மோதி டிரைவர் பலி
x

கடையநல்லூரில் லாரி மோதி டிரைவர் பலியானார்.

தென்காசி

கடையநல்லூர்:

கடையநல்லூர் அருகே திரிகூடபுரம் விவேகானந்தா தெருவைச் சேர்ந்த ராஜன் மகன் ராஜேஷ் (வயது 37). டிரைவர். இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சுரண்டைக்கு சென்றுவிட்டு ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மங்களாபுரம் அருகே தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது அந்த வழியாக வந்த மினி லாரி, ராஜேஷ் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், வரும் வழியில் ராஜேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story