காசநோய் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
காசநோய் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூரில் தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் சார்பில் உலக காசநோய் தினத்தை முன்னிட்டு காசநோய் ஒழிப்பு உறுதிமொழி-விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது. அரியலூர் நகராட்சி பஸ் நிலையம் அருகே புறப்பட்ட இ்ந்த விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ரமணசரஸ்வதி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் காசநோய் குறித்து பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சென்றனர். முன்னதாக அவர்கள் கலெக்டர் தலைமையில் காசநோய் ஒழிப்பு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். இதில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் முத்துகிருஷ்ணன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story