திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்


திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்
x

தூத்துக்குடியில் திருட்டு வழக்கில் சிறுவன் உள்பட 2 பேர் சிக்கினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடியை சேர்ந்தவர் பழனிவேல்ராஜ். இவர் மோட்டார் சைக்கிளை 3-வது மைல் பகுதியில் நிறுத்தி விட்டு சென்றாராம். மீண்டும் வந்து பார்த்த போது யாரோ மர்ம நபர், அவரது மோட்டார் சைக்கிளை திருடிச்சென்று விட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி பிரையண்ட்நகர் 8-வது தெருவை சேர்ந்த தனுஷ்கோடி மகன் கார்த்திக் (வயது 21) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

உடனடியாக போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, கார்த்திக் மற்றும் 17 வயது சிறுவன் ஒருவரும் சேர்ந்து மேலும் 5 திருட்டு வழக்குகளிலும் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில் போலீசார் அந்த சிறுவனையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் மற்றும் திருடப்பட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.


Next Story