அடையாளம் தெரியாத ஆண் பிணம்


அடையாளம் தெரியாத ஆண் பிணம்
x
தினத்தந்தி 28 May 2023 6:45 PM GMT (Updated: 28 May 2023 6:46 PM GMT)

வளவனூர் அருகே அடையாளம் தெரியாத ஆண் பிணம் போலீசார் விசாரணை

விழுப்புரம்

வளவனூர்

வளவனூர் அருகே உள்ள கெங்கராம்பாளையம் தனியார் பொறியியல் கல்லூரி அருகே நேற்று காலை 4 அடி பள்ளத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் கிடந்தது. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் எதுவும் தொியவில்லை? இதுபற்றி கிராம நிர்வாக அலுவலர் பத்மஸ்ரீ கொடுத்த புகாரின் பேரில் வளவனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்து கிடந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்து கிடந்த நபர் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story