காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா


காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
x

தாயில்பட்டி அருகே காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அருகே உள்ள வனமூர்த்திலிங்காபுரத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. கரகம் எடுத்தல், பால்குடம் ஊர்வலம், அம்மன் பூ சப்பரத்தில் சிறப்பு அலங்காரத்துடன் முக்கிய வீதிகளில் உலா வருதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அதேபோல துலுக்கன்குறிச்சியில் காளியம்மன் கோவில், ஏழாயிரம் பண்ணையில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story