மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா


மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா
x

வாய்மேடு அருகே மாரியம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

வாய்மேட்டை அடுத்த பஞ்சநதிக்குளம் கிழக்கு மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா கடந்த 15- தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், வீதி உலாவும் நடைபெற்று வருகிறது. நேற்று பால், பன்னீர், சந்தனம், திருநீறு, இளநீர், தேன் உள்ளிட்டவைகளால் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி வீதி உலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மஞ்சள் விளையாட்டு விழா வருகிற 31-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.


Next Story