ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு


ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு
x

ஆறுமுகசுப்ரமணியசாமி கோவிலில் வைகாசி விசாக சிறப்பு வழிபாடு

திருவாரூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள பழையனூர் காக்கையாடியில் ஆறுமுகசுப்ரமணியசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் நேற்று வைகாசி விசாகத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் சாமிக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story