கால்நடை மருந்தக கட்டிடம்


கால்நடை மருந்தக கட்டிடம்
x

கால்நடை மருந்தக கட்டிடம்

திருவாரூர்

பெருந்தரக்குடி ஊராட்சியில் கால்நடை மருந்தக கட்டிடத்தை கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்தார்.

கால்நடை மருந்தக கட்டிடம்

கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சியில் கால்நடை மருந்தக கட்டிடத்தினை கலெக்டர் சாருஸ்ரீ திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சித்தலைவர் பாலசுப்ரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கால்நடை பராமரிப்புத்துறை, பால்வளத்துறை மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் கலைஞர் நூற்றாண்டு கால்நடை மருத்துவ முகாமை கலெக்டர் தொடங்கி வைத்தார். முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, ஆன்மை நீக்கம், சினை பரிசோதனை, மலட்டுதன்மை நீக்கம், குடற்புழு நீக்கம், தடுப்பூசி போடுதல், செயற்கைமுறை கருவூட்டல் உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்படுகிறது. எனவே இந்த முகாமை கால்நடை வளர்ப்போர்கள் பயன்படுத்தி கொண்டு பயனடையுமாறு கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சிறந்த கால்நடை வளர்ப்போர்களுக்கு பரிசு

அதனைதொடர்ந்து, கால்நடைகளுக்கான தாது உப்பு, தீவனங்கள், புல் கரணைகள் உள்ளிட்டவைகளை கால்நடை வளர்ப்போரிடம் கலெக்டர் வழங்கினார். முன்னதாக வெள்ளாடு, நாய், ஆடு, மாடு உள்ளிட்ட 500 கால்நடைகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு குடற்புழுநீக்கம் செய்யப்பட்டுள்ளது.

அதனை தொடர்ந்து சிறந்த பால் உற்பத்தியாளர் 3 பேருக்கும், சிறந்த கால்நடை வளர்ப்போர்களை ஊக்குவிக்கும் விதமாக 3 பேருக்கும் கலெக்டர் பரிசுகள் வழங்கினார். இதில் கொரடாச்சேரி ஒன்றியக்குழு துணைத்தலைவர் பாலசந்தர், கால்நடைபராமரிப்புதுறையின் இணை இயக்குனர் ஹமீது அலி, ஊராட்சி மன்றத்தலைவர் மதிவாணன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.


Next Story