சுதந்திர தினத்தன்று 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்


சுதந்திர தினத்தன்று 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
x
தினத்தந்தி 9 Aug 2023 9:00 PM GMT (Updated: 9 Aug 2023 9:00 PM GMT)

தேனி மாவட்டத்தில் சுதந்திர தினத்தன்று 130 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும் என்று கலெக்டர் ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தேனி மாவட்டத்தில் உள்ள 130 கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தின நாளான வருகிற 15-ந்தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும். அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் இந்த கூட்டம் நடத்தப்படவுள்ளது. கூட்டத்தை சிறப்பாகவும், பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் வகையிலும் தேவையான ஏற்பாடுகளை செய்ய அனைத்து வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, தூய்மையான குடிநீர் வினியோகம் செய்வது பற்றி விவாதித்தல், இணைய வழி மனைப்பிரிவு மற்றும் கட்டிடம் கட்ட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஜல்ஜீவன் இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், தூய்மை பாரத இயக்கம் உள்பட பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story