பெண்கள் மட்டுமே பங்கேற்ற கிராம சபை கூட்டம்


பெண்கள் மட்டுமே பங்கேற்ற கிராம சபை கூட்டம்
x

முத்துக்காபட்டியில் பெண்கள் மட்டுமே பங்கேற்ற கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

நாமக்கல்

சேந்தமங்கலம்

நாமக்கல் மாவட்டத்தில் முதன்முதலாக முத்துக்காப்பட்டி ஊராட்சியில் நேற்று மகளிர் கிராம சபை கூட்டம் நடந்தது. ஏற்கனவே மாவட்ட அளவில் முன்மாதிரி கிராமமாக விளங்கி வரும் அந்த ஊராட்சியின் மற்றொரு சிறப்பு அம்சமாக இந்த கூட்டம் அமைந்துள்ளது. கூட்டத்துக்கு ஊராட்சியின் 9-வது வார்டு உறுப்பினர் சுசிலா தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த சில நாட்களாக கால வரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை காவலர்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி பணிக்கு திரும்ப ஏற்பாடு செய்தார். தொடர்ந்து அங்குள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு செயலாளர் காமராஜர், எருமப்பட்டி மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயந்தி ஆகியோர் மகளிர் மேம்பாடு பற்றியும் அரசு திட்டங்கள், கடன் உதவி, பயிற்சிகள், வேலை வாய்ப்புகள் மற்றும் பல்வேறு வழிமுறைகளை பற்றி விளக்கி பேசினர்.


Next Story