காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்


காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 15 April 2023 6:45 PM GMT (Updated: 15 April 2023 6:45 PM GMT)

திருவெண்ணெய்நல்லூர் அருகே காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்

திருவெண்ணெய்நல்லூர்:

திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆமூர் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து கடந்த ஒரு மாதமாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இது பற்றி ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் கிராம மக்கள் பஸ் நிறுத்தம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமலிங்கம், சவுந்தர்ராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.


Next Story