தெருக்களில் பாதாள சாக்கடை கழிவுநீர்


தெருக்களில் பாதாள சாக்கடை கழிவுநீர்
x

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை கீழவாசல் பகுதியில் உள்ள தெருக்களில் பாதாள சாக்கடை கழிவுநீர் வழிந்தோடுகிறது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க மேயரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.

பாதாள சாக்கடை திட்டம்

தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக பல இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது.

தொற்றுநோய்

இந்த நிலையில் கீழவாசல் பெரியசாலை ரோடு, அப்துல்லா நகர், சிராஜூதீன் நகர் போன்ற தெருக்களில் பாதாள சாக்கடையிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுவதுடன் அந்த பகுதியில் உள்ள பல்வேறு வீடுகளை சுற்றிலும் தேங்கி காணப்படுகிறது. .தேங்கி நிற்கும் கழிவு நீரில் கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதால் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக இந்த நிலை நீடிப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்துடனே சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று 50-க்கும் மேற்பட்டோர் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story