முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு


முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
x
தினத்தந்தி 18 May 2023 7:00 PM GMT (Updated: 18 May 2023 7:00 PM GMT)

வாசுதேவநல்லூர் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்காசி

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் எஸ்.தங்கப்பழம் வேளாண்மை கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளை வரவேற்கும் நிகழ்ச்சி நடந்தது. கல்வி குழுமத்தின் தாளாளர் எஸ்.தங்கப்பழம், செயலாளர் எஸ்.டி.முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராமலிங்கம் தலைமை தாங்கினார். உதவி பேராசிரியை தினேகா வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலைய தலைவர் மற்றும் பேராசிரியர் சீனிவாசன் கலந்துகொண்டு பேசினார். மூத்த ஆண்டு மாணவ-மாணவிகள், முதலாம் ஆண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி உற்சாகப்படுத்தினர். விழாவையொட்டி கலைநிகழ்ச்சிகளும் நடந்தது. விழா முடிவில் உதவி பேராசிரியர் ஹரி சங்கர் நன்றி கூறினார்.


Next Story