நலத்திட்ட உதவிகள்


நலத்திட்ட உதவிகள்
x

பாம்பனில் த.மு.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ராமநாதபுரம்

பனைக்குளம்,

த.மு.மு.க 29-ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் ஆரோக்கிய மருத்துவமனை இணைந்து மீனவர் கிராமங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பாம்பன் பகுதியில் மருத்துவ முகாம் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் த.மு.மு.க. மாநில துணை பொதுச்செயலாளர் முகவை எஸ். சலிமுல்லாகான் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவி வழங்கி தலைமை உரையாற்றினார். ம.தி.மு.க. மாவட்ட மீனவர் அணி செயலாளர் பேட்ரிக் முன்னிலையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. மாவட்ட பொருளாளர் ஹமீத் சபிக் தலைமை தாங்கினார். இதைத்தொடர்ந்து பயனாளிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டன இதில் மருத்துவ உதவி தொகையாக அப்துல்லா என்பவருக்கு ரூ.20 ஆயிரம், மண்டபம் ஹமீது என்பவருக்கு கல்வி உதவியாக ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டன. இதில் 250-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். பரிசோதனை இறுதியில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதில் மாவட்ட தலைவர் பிரிமியர் இப்ராஹிம், மாவட்ட செயலாளர் அப்துல் ரஹீம், ம.ம.க. மாவட்டச் செயலாளர் ஆசிக் சுல்தான், த.மு.மு.க. நகர் செயலாளர் முகமது தமீம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் ராஜப் ரஹ்மான், பரகத்துல்லா உள்பட பலர் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பாம்பன் த.மு.மு.க. மருத்துவ சேவை அணியினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story