231 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


231 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x

குள்ளஞ்சாவடி அருகே நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 231 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

கடலூர்

குறிஞ்சிப்பாடி,

குறிஞ்சிப்பாடி ஒன்றியம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள கோதண்டராமபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் மனுநீதி நாள் முகாம் நடந்தது.

இதற்கு கடலூர் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமை தாங்கினார். மாவட்ட கல்விக்குழு தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். கடலூர் தாசில்தார் பூபாலச்சந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித்சிங் கலந்து கொண்டு வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் தேர்வு செய்யப்பட்ட 231 பயனாளிகளுக்கு மொத்தம் ரூ.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயா, துணை தாசில்தார் அசோகன், வருவாய் ஆய்வாளர் தேன்மொழி, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story