பழனிக்கு பாதயாத்திரை சென்றபோதுமோட்டார்சைக்கிள் மோதி 4 பேர் படுகாயம்


பழனிக்கு பாதயாத்திரை சென்றபோதுமோட்டார்சைக்கிள் மோதி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Jan 2023 6:45 PM GMT (Updated: 20 Jan 2023 6:45 PM GMT)

உத்தமபாளையம் அருகே பழனிக்கு பாதயாத்திரை சென்றபோது மோட்டார்சைக்கிள் மோதி 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி

உத்தமபாளையம் அருகே உள்ள நாகைய கவுண்டன்பட்டியை சேர்ந்த 75 பேர் பழனிக்கு பாதயாத்திரை சென்றனர். நேற்று முன்தினம் பெரியகுளம்- வத்தலக்குண்டு சாலையில் காட்ரோடு அருகே சென்றபோது, அந்த வழியாக வந்த மோட்டார்சைக்கிள் பாதயாத்திரை பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் மோட்டார்சைக்கிள் மோதியதில் நாகைய கவுண்டன்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 30), சாமிதுரை (48), ராஜேஷ் (28) கோபாலக்கண்ணன் (34) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து மற்ற பக்தர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story