தேன்கனிக்கோட்டை அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை


தேன்கனிக்கோட்டை அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
x
தினத்தந்தி 27 April 2023 7:00 PM GMT (Updated: 27 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே பாலதொட்டனப்பள்ளியை சேர்ந்தவர் மல்லேஷ். இவருடைய மனைவி உமா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் உமா உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார்.

இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை என தெரிகிறது. இதனால் மனமுடைந்த அவர், கடந்த 22-ந் தேதி விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து தளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story