விழுப்புரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை


விழுப்புரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 1 April 2023 6:45 PM GMT (Updated: 1 April 2023 6:46 PM GMT)

விழுப்புரத்தில் பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

விழுப்புரம்

விழுப்புரம் டி.எஸ்.ஆர். நகரில் வசித்து வந்தவர் மதியழகன் மகள் தீபா என்கிற திவ்யா (வயது 25). இவர் பி.பி.ஏ. வரை படித்து முடித்துவிட்டு பியூடிசியன் வேலை செய்து வந்தார். சம்பவத்தன்று இவருடைய பெற்றோர், கடைவீதிக்கு சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது தீபா, அங்குள்ள மின்விசிறியில் துப்பட்டாவினால் தூக்குப்போட்டு தற்கொலை செய்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story