பெண் தூக்குப் போட்டு தற்கொலை .


பெண் தூக்குப் போட்டு தற்கொலை .
x

பாபநாசம் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக திருமணமாகி 6 மாதத்தில் பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டாா்

தஞ்சாவூர்

பாபநாசம்;

பாபநாசம் அருகே பண்டாரவாடை வர்ணதைக்கால் தெருவில் வசித்து வந்த ஷாஜகான் மனைவி ஹவ்ரா பீவி வயது 24. இவர்களுக்கு திருமணமாகி 6 மாதம் ஆகிறது.சம்பவதன்று குடும்ப பிரச்சனை காரணமாக மன உலைச்சலில் இருந்த ஹவ்ராபீவி கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் சேலையில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து ஹவ்ரா பீவி தம்பி முகமது காசிம் வயது -21, கொடுத்த புகாரின் பேரில் பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்குபதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.ஹவ்ராபீவி க்கு திருமணமாகி 6 மாதங்கள் ஆவதால் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா விசாரனை நடத்தி வருகின்றனர்.


Next Story