ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி


ராசிபுரம் அருகே  மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி
x

ராசிபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி பெண் பலி

நாமக்கல்

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள பேளுக்குறிச்சி கணவாய்காடு பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 67). விவசாயி. இவருடைய மனைவி சகுந்தலா (54). கணவன் மனைவி இருவரும் ராசிபுரம் அருகே பாரக்கல் புதூரில் உள்ள அத்தனூர் அம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை அத்தியப்பன் ஓட்டினார். பின்னால் சகுந்தலா அமர்ந்து சென்றார். ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் பாலப்பாளையம் பகுதியில் சென்றபோது பின்னால் வந்த கார் மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த சகுந்தலாவை ராசிபுரம் தனியார் ஆஸ்பத்திரியில் சிசிச்சைக்காக சேர்த்தனர். அங்கிருந்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை அளித்தபின் மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் அவர் இறந்தார்.

இதுபற்றி அத்தியப்பன் மகன் சபரிநாதன் ராசிபுரம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி காரை ஓட்டிச் சென்ற ஆயில்பட்டி ஆண்டிக்குட்டையை சேர்ந்த சூரியபிரகாஷ் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர். இந்த விபத்தில் காயம் அடைந்த விவசாயி அத்தியப்பன் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். விபத்தில் இறந்த சகுந்தலாவின் உடல் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.


Next Story